உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்பிறை ஏகாதசி கோவிலில் வழிபாடு

வளர்பிறை ஏகாதசி கோவிலில் வழிபாடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது.விழாவையொட்டி, தாயார் மற்றும் பெருமாளுக்கு இளநீர், தயிர், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு விதமான அபிேஷக பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன், பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை