உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறில் உள்ள தனியார் ரிசார்ட் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று நேற்று முன் தினம் இரவு ஊர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனே மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் சசிகுமார் அறிவுறுத்தலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் பாபு ஆகியோர் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை