மேலும் செய்திகள்
மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் அக்சரா
18-Feb-2026
அத்வைத் தாட் அகாடமி பள்ளி மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிப் பாதையை நிர்ணயிக்கிறது. கோவை சவுரிபாளையத்தில் உள்ள அத்வைத் பள்ளி, மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய முழுமையான கல்வியை வழங்குகிறது. ஆக்கப்பூர்வமாகவும், அறிவுசார் கல்வியைத் தனித்துவமாகவும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவனும் பல்வேறு துறைகளில் சிறப்புடன் செயல்பட வழி ஏற்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வகங்கள், திறன்மிக்க ஆசிரியர்கள், தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள், பசுமையான சூழல் ஆகியவை பள்ளியின் சிறப்பம்சங்கள். மாணவர்களை சர்வதேசத் தரத்திற்கு இணையாக மாற்ற ரோபோடிக்ஸ் கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. நீர் விளையாட்டுப் பகுதி, இன்டோர் விளையாட்டுகளும் உள்ளன. மாதம் இரு சனிக்கிழமைகள் புத்தகம் இல்லா நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு செயலாக்கங்களும் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படுகிறது . பள்ளியின் தாளாளர், முன்னணி தொழில் அதிபருமான ரவிசாமின் சமூகச் சிந்தனையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வை மாணவர்களை தங்களது வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. இத்தனித்துவமான அணுகுமுறையால் மாணவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து, சாதனைகள் புரிய முடியும்.
18-Feb-2026