வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Humanity and children are more important than dogs which should be breed in houses and not in roads
கோவை: பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸில் விழிப்புணர்பு ஊர்வலம் நடந்தது. தெருநாய்களுக்கும் மனிதர்களுக்கும் நலம் பயக்கும் வகையில், நிலையான தீர்வை மாநில அரசு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. விலங்குகள் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோசபின் செலினா கூறுகையில்,''மக்கள், நாய்கள் சுமூகமாக இருக்கும் வகையில் நிலையான தீர்வை கொண்டு வர முடியும். அரசு அதுகுறித்து யோசிக்க வேண்டும். எங்களால் முடிந்தவரை பல விஷயங்களை மேற்கொள்கிறோம். தெருநாய்களை காப்பாற்ற மாநில அரசு தன்னார்வலர்களை பயன்படுத்த வேண்டும். நாய்களுக்கு உணவு கிடைக்காமல் மனது பாதிக்கப்பட்டு, பயத்தில் மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன. ஒவ்வொரு கைவிடப்பட்ட நாய்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றன. அதை தடுக்க வேண்டும்,'' என்றார். ஊர்வலத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள், தெருநாய்களுக்கு தேவையான தீர்வு வழங்குவது குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் சென்றனர்.
Humanity and children are more important than dogs which should be breed in houses and not in roads