மரக்கன்றுகளை நட்ட பா.ஜ.,வினர்
கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி செட்டிவீதியிலுள்ள குளக்கரையில் புன்னை வகை மரக்கன்றை பா.ஜ.,மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் நட்டு தமிழ்தாய் என்று பெயரிட்டார். அசோக்நகர் கன்னிகா அவென்யூவில் உக்கடம் மண்டல் சார்பில் வேப்பமரக்கன்று நடப்பட்டது. அதற்கு கன்னிகா தாய் என்று பெயரிடப்பட்டது. மூன்று நாட்களுக்கு மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.