உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹெல்மெட் அணிய கமிஷனர் அறிவுறுத்தல்

ஹெல்மெட் அணிய கமிஷனர் அறிவுறுத்தல்

கோவை; சாலை பாதுகாப்பு தன்னார்வ பணியில் ஈடுபடும் சிறந்த கல்லுாரிகளுக்கு, 'உயிர்' அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் விருது வழங்கி பேசுகையில்,தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து, தன்னார்வ மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் அசோக்குமார், மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !