உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

ஆனைமலை; ஆனைமலை அருகே, தென்சங்கம்பாளையத்தில் தனியார் தோட்டத்தில் தவறி விழுந்த கறவை மாட்டை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.ஆனைமலை அருகே, தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த கண்ணப்பன் என்பவரின் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கறவை மாடு விடப்பட்டது. அப்போது, மாடு கிணற்றில் தவறி விழுந்தது. இதை கண்ட உரிமையாளர், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், 60 அடி கிணற்றில் இருந்த மாட்டை, கிரேன் உதவியுடன் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ