மேலும் செய்திகள்
காந்தி ஜெயந்தி விழா: ஆசிரமத்தில் கொண்டாட்டம்
04-Oct-2024
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ரிஷிகேஷ் சுவாமிகள், அம்மனை தரிசனம் செய்தனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு ரிஷிகேஷ் பிரம பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம் மற்றும் ஆனைமலை தயானந்தரின் ஆர்ஷ வித்யா குருகுல ஆச்சார்யர்கள், பூஜ்ய ஸ்ரீ சாதத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், ஜகதாத்மனந்தா சரஸ்வதி சுவாமிகள், கணேஷ் சொரூபானந்த சரஸ்வதி சுவாமிகள், கீதானநத் சுவாமிகள் மற்றும் குருகுல மாணவர்கள், 70 பேர் அம்மனை தரிசனம் செய்ய வந்தனர்.கோவிலுக்கு வந்த சுவாமிகளை, மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார். கோவிலில் தரிசனம் செய்த சுவாமிகளுக்கு, மரியாதை செலுத்தி ஆசிர்வாதம் பெற்றனர்.
04-Oct-2024