உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் -- பட்டம் மெகா வினாடி - வினா போட்டி; விவேக் வித்யாலயா பள்ளி மாணவர்கள் அபாரம்

தினமலர் -- பட்டம் மெகா வினாடி - வினா போட்டி; விவேக் வித்யாலயா பள்ளி மாணவர்கள் அபாரம்

கிணத்துக்கடவு; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டி கிணத்துக்கடவு, விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, 'பட்டம்' இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும்.இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், 'மெகா வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், கிணத்துக்கடவு, விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.பள்ளியில் நடந்த வினாடி - வினா போட்டியில், 500 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'ஜி' அணியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவி தக் ஷிதா மற்றும் ஞானேஸ்வர் ஆகியோர் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை முதல்வர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள் சுகன்யா, விஜயராணி மற்றும் ஆசிரியர் ஜெய குமார் ஆகியோர் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

ஆர்வம் அதிகரிப்பு

பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி கூறுகையில், ''மாணவர்கள், 'தினமலர் -- பட்டம்' இதழ் படிக்கும் போது புத்திக்கூர்மை மற்றும் ஆர்வம் அதிகரிக்கிறது. பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவர்கள் முதல் பட்டம் இதழ் படித்து வருகின்றனர். இதனால், மாணவர்கள் பல வகையான தேர்வுகள் எழுத உதவியாக இருக்கிறது.தமிழ் வழிக் கல்வி மாணவர்களிடையே நன்கு வளர்ந்து வருகிறது. தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் இலக்கணத்தில் எப்படி இருக்கிறது என அறிந்து கொள்கின்றனர். 'பட்டம்' படிப்பது, 'நீட்' தேர்வுக்கு தயாராக கைகொடுக்கிறது,'' என்றார்.

பக்கத்துக்கு பக்கம் புதுப்புது தகவல்!

மாணவன் ஞானேஸ்வர்: 'பட்டம்' இதழ் படிப்பதால், கல்வி சார்ந்த புது தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடிகிறது. பொதுஅறிவு மட்டுமின்றி மேல் படிப்பு சம்பந்தமான தகவல்களும் இருப்பது சிறப்பாக உள்ளது. வரலாறு சார்ந்த தகவல்களும் இடம் பெற்றிருப்பதால், படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது. 'பட்டம்' இதழை முழுமையாக படிப்பதால், வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற முடிந்தது.மாணவி தக் ஷிதா: 'பட்டம்' இதழிலில், 'பாடம்' சார்ந்து மட்டுமின்றி, பல்வேறு தகவல்கள் கூடுதலாக இருப்பதால், பல்வேறு வகைகளில் கைகொடுக்கிறது. 'பட்டம்' இதழில் பக்கத்துக்கு பக்கம் புதுப்புது தகவல்கள் இருப்பதால், மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. படிக்க எளிமையாக உள்ளது. நாட்டு நடப்பு சார்ந்த தகவல்கள் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. 'பட்டம்' படிப்பது போட்டித்தேர்வுக்கு கைகொடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !