மேலும் செய்திகள்
பெரியபோது கிராமத்தில் கண் சிகிச்சை முகாம்
19-Jun-2025
அன்னூர்; பொகலூரில் இன்று நடக்கும் இலவச கண் பரிசோதனை முகாமில், பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், பொகலுாரில், மகளிர் சுய உதவிக் குழு கட்டட வளாகத்தில், இன்று காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.இதில் பொகலூர், ஒட்டர்பாளையம், வடவள்ளி, வடக்கலூர் ஊராட்சிகளை சேர்ந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், கண்ணில் நீர் வடிதல், கண் புரை உள்ளிட்ட அனைத்து கண் நோய்களுக்கும், இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்படும்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்யப்படும்' என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19-Jun-2025