உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு வார விடுமுறைக்கு பிறகு குடும்ப கோர்ட்களில் விசாரணை

இரு வார விடுமுறைக்கு பிறகு குடும்ப கோர்ட்களில் விசாரணை

கோவை; கோவையிலுள்ள இரண்டு குடும்ப நீதிமன்றங்களில், இரண்டு வார கோடை விடுமுறைக்கு பிறகு, 19 ம் தேதி முதல் விசாரணை துவங்கியுள்ளது. கோவையில் மாஜிஸ்திரேட் கோர்ட்கள், அனைத்து சிறப்பு கோர்ட்கள், விரைவு கோர்ட்கள் தவிர மற்ற நீதிமன்றங்களுக்கு, மே 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, குடும்ப நீதிமன்றங்களுக்கும், மே 1 முதல் 18ம் தேதி வரை இரண்டு வாரம் விடுமுறை விடப்பட்டது. இதனால், கோவையிலுள்ள முதன்மை மற்றும் கூடுதல் குடும்ப நீதிமன்றம் மே 18 வரை விசாரணை நடைபெறவில்லை. விடுமுறை முடிந்து, 19ம் தேதி முதல், வழக்கம் போல விசாரணை துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை