உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணை கொள்முதல்; இளநீர் விலை உயர்வு

பண்ணை கொள்முதல்; இளநீர் விலை உயர்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 41 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 16,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்து காணப்படுகிறது.வட மாநிலங்களில், இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளது. எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை