இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.பொள்ளாச்சி கோட்டத்தில், அக்., மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (6ம் தேதி) காலை, 11:00 மணிக்கு சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமையில் நடக்கும் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.எனவே, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை சப் - கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.