அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கள ஆய்வு
வால்பாறை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கல்லுாரியில் கள ஆய்வு மேற்கொண்டனர். வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கள ஆய்வு மேற்க்கொண்டனர். கல்லுாரி முதல்வர் ஜோதிமணி தலைமையில் நடந்த கள ஆய்வில், பேராசிரியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் பேசும் போது, அரசு கல்லுாரியில் மாணவர்கள் சேர்ந்து படித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எளிதில் அடையலாம். பிளஸ் 2 முடித்த பின், மாணவர்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து கல்லுாரியில் படிக்கலாம். அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை, நான் முதல்வன் திட்டத்தில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும். கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே தகுதியான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படும், என்றனர்.