இறுதி கட்ட பயிற்சி முகாம் : தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பொள்ளாச்சி: வால்பாறை சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி முகாம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. அதில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவு செய்யப்பட்டன. பயிற்சி மற்றும் தபால் ஓட்டுப்பதிவை, தேர்தல் பார்வையாளர் யசேந்திர சிங், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா ஆகியோர் ஆய்வு செய்தனர். பயிற்சி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். சட்டசபை தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், தேர்தல் ஆணையம் கூறுவதை முறையாக பின்பற்ற வேண்டும் என ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.