குப்பை கிடங்கில் நள்ளிரவில் தீ
போத்தனுார்; வெள்ளலுாரில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகத்தின் ஒரு பகுதியில், குப்பை கொட்டப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு, இக்குப்பை கழிவின் ஒரு பகுதியில் தீ பற்றியது. அவ்வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரு தீயணைப்பு வாகனங்களுடன், மேலும் சில வாகனங்கள் தருவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின், தீ அணைக்கப்பட்டது.