ஐந்தாண்டு சாதனை புத்தகம் வெளியீடு
போத்தனூர்: ஈச்சனாரியிலுள்ள தனியார் பல்கலை அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், 'என் ஊர் என் கனவு' 'விஷன் 2030 கோயம்புத்தூர்' மற்றும் செய்தி மக்கள் துறை சார்பில் ஐந்தாண்டு சாதனை புத்தகத்தை, கலெக்டர் பவன்குமார் வெளியிட்டார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா, சலவை பெட்டி வழங்கப்பட்டது. மேயர் ரங்கநாயகி, அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.