உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 35 வயதுக்கு மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

35 வயதுக்கு மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்.,ல், 35 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு சலுகை கட்டணத்தில், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான முகாம், இன்று (மே 2) துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜோசப் கூறியதாவது:இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உணவு மற்றும் உடல் நலனில் அக்கறை செலுத்த பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இவ்வாறான சூழலில், ஏதாவது நோயின் அறிகுறி வெளிப்படும் வரை, அது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வரை, அவர்கள் கண்டுகொள்வதில்லை.சில நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் வாயிலாக, உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம். ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாக நிவாரணம் பெறலாம். உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்க்கலாம். இதற்கு முழு உடல் பரிசோதனை பெரிதும் உதவுகிறது.35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக துவக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிய முடியும். பல்வேறு நோய் அறிகுறி உள்ளோர், நோய் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய விரும்புவோர், புகை, மது பழக்கம் உள்ளோர், சர்க்கரை ரத்த அழுத்த பாதிப்பு உள்ளோர் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.உடலில் பொதுவாக ரத்தம், சிறுநீர், மலம், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம், மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் உள்ளன; அறிகுறிகளுக்கு ஏற்ப அதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.கே.எம்.சி.எச்.,ல், 35 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு, மே 2 முதல், 31ம் தேதி வரை முழு உடல் பரிசோதனை முகாம் நடக்கிறது; கட்டணத்தில், 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 87548 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ