உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பீகாரில் இருந்து கஞ்சா கடத்தல்

 பீகாரில் இருந்து கஞ்சா கடத்தல்

கோவை: மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னியம்பாளையம் தனியார் மருத்துவமனை அருகே காலி மைதானத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். சோதனையில், அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை விற்க, 18 பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்தார். அவர், பீகார் மாநிலம் ராயபூரா ரேப்பூராவை சேர்ந்த சுபோத்குமார், 29 என்பதும், பீகாரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். 2.500 கிலோ கஞ்சா, 18 பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை