உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் இம்மாதம், 30ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.காலை, 5:00 மணிக்கு சிறப்பு ஹோமம், 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, காலை, 6:00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு அப்பநாயக்கன்பாளையம் பைந்தமிழ் ஒயிலாட்ட குழுவின் ஒயிலாட்ட நிகழ்ச்சி, மாலை, 5:00 மணிக்கு மகா உற்சவர் திருவீதி உலா, தொடர்ந்து கம்பத்தாட்டம் அரங்கேற்றம், பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !