| ADDED : ஜன 01, 2026 05:36 AM
வால்பாறை: பஸ் ஸ்டாண்டில், அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில், சின்கோனா, ேஷக்கல்முடி, முடீஸ், சோலை யாறுடேம் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம் செய்யப் படுகின்றன. பொதுமக்கள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால், எஸ்டேட் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், டூரிஸ்ட் வேன்கள் விதிமுறையை மீறி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர். போலீசார் கூறுகையில்,'குறுகலான இடத்தில் அமைந்துள்ள காந்திசிலை பஸ் ஸ்டாண்டு சுற்றிலும், வாகனங்கள் நிறுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வாகனங்கள் நிறுத்தினால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும்' என்றனர்.