இரண்டு நாட்கள் மழை உண்டு
கோவை : நேற்று மாலை கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த, திடீர் மழையால் நகரம் குளிர்ச்சி அடைந்துள்ளது. தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இரு நாட்கள் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கோவையிலும் இரு நாட்கள் மிதமான மழை இருக்கும் என, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.