உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலில் கிருத்திகை பூஜை: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவிலில் கிருத்திகை பூஜை: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

வால்பாறை: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த, ஐப்பசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறையில் உள்ள முருகன் கோவில்களில், கார்த்திகை வழிபாடு நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. பின் காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி முருகபெருமானை மகிழ்வித்தனர். கிருத்திகை பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதே போல், வால்பாறை அடுத்துள்ள முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி திருவேடசெந்துார் தண்டாயுதபாணி கோவில், கிருத்திகை விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சிறப்பு அலங்காரத்தில் தண்டாயுதபாணி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி