வரும் 14ம் தேதி லோக்அதாலத்
பொள்ளாச்சி; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக் அதலாத்' விசாரணை டிச., 14ல், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் நடக்கிறது.சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, சொத்து, பாகப்பிரிவினை, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. சமரச தீர்வு காண விரும்புவோருக்கு, கடந்த 12ம் தேதி முதல் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.