கோவை மாவட்டத்தில்ஜூன் 14ல் லோக் அதாலத்
கோவை,; கோவை மாவட்டத்தில், ஜூன், 14ல் தேசிய 'லோக்அதாலத்' விசாரணை நடக்கிறது.இதற்காக இதுவரை, 1500 க்கும் மேற்பட்ட நிலுவையிலுள்ள வழக்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக்அதலாத்' விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் ஜூன் 14ல் தேதி நடைபெறுகிறது.நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம் , சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, வங்கி கடன் நிலுவை, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.லோக் அதாலத்தில், சமரச தீர்வு காண விரும்புவோருக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள 1,500 க்கும் மேற்பட்ட வழக்குகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கி கடன் நிலுவை தொடர்பாக அதிக வழக்குகள் லோக்அதாலத் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.