உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாடுகள் வரத்து குறைவு; சந்தையில் விற்பனை டல்

மாடுகள் வரத்து குறைவு; சந்தையில் விற்பனை டல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாட்டு சந்தையில் விற்பனை மந்தமாக நடந்தது.பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.இந்நிலையில், நேற்று மாடுகள் விற்பனை மந்தமாக நடந்தது.வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, மாடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டது; 1,500 மாடுகள் மட்டுமே வரத்து இருந்தது. நாட்டு காளை, 40 - 45 ஆயிரம் ரூபாய், நாட்டு பசு, 25 - 30 ஆயிரம், நாட்டு எருமை, 30 - 35 ஆயிரம், முரா, 40 - 45 ஆயிரம் ரூபாயும்; ஜெர்சி, 25 - 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கேரளாவில் உள்ள ேஹாட்டல்களுக்கு இறைச்சி தேவை குறைவாக இருப்பதால், மாடுகள் விற்பனையும் மந்தமாக உள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை