தனியார் கம்பெனியில் திருடியவர் கைது
கோவில்பாளையம்; கீரணத்தத்தில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருபவர் ராதாமணி, 48. இங்கு பித்தளை பொருட்கள் திருட்டுப் போயின.சோதனை செய்ததில் அங்கு பணிபுரிந்து வந்த கோவர்த்தன மூர்த்தி, 31. திருடியது தெரிய வந்தது. இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவர்த்தன மூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து, 50,000 ரூபாய் மதிப்புள்ள, 50 கிலோ பித்தளையை பறிமுதல் செய்தனர்.