வடக்கு குறு மைய தடகளம்; மாணவ, மாணவியர் அசத்தல்
கோவை; பள்ளி கல்வித்துறை சார்பில், குடியரசு தின விளையாட்டு மற்றும் வடக்கு குறு மைய தடகளப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது. போட்டிகளை, பி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் 1,500 மீ., ஓட்டத்தில், ஏ.வி.பி., பள்ளி கிரிஷ், பாப்டிஸ்ட் அகாடமி மாணவன் லெராய், பயனியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி அரைஸ் ரூபி வெற்றி பெற்றனர் மகளிருக்கான, 1500 மீ., போட்டியில், பயனியர் மேல்நிலைப்பள்ளி இலக்கியதேவி, அசோகபுரம் மாடல் அரசு மேல் நிலைப்பள்ளி கவிவர்ஷினி, பயனியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீமதி ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட 1,500 மீ., போட்டியில் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி அனிஷ், பயனியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி பிரியதர்ஷன், எஸ்.ஆர்.கே.வி., சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி தினேஷ் வெற்றி பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான 1,500 மீ., பிரிவில், பிஷப் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி ஹரிணி ஸ்ரீ, பயனியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி சூர்யா, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளி ஜீனா ஆகியோர் வெற்றி பெற்றனர். விழாவில், பி.ஜி.வி.,பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், நிறுவனர் விஸ்வநாதன், தாளாளர் முத்துலட்சுமி, ஆலோசகர் அருணா விஸ்வநாதன் பங்கேற்றனர்.