சச்சிதானந்த பள்ளியில் ஓணம் விழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோர் சச்சிதானந்த சாமிஜி சிலையின் முன்பு, வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டனர். கல்லூரி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர் கவிதாசன் ஆகியோர் ஆசிரியர்களையும், மாணவிகளையும் பாராட்டினர்.