உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமைதியாக நடந்தது பாஷா உடல் அடக்கம் 

அமைதியாக நடந்தது பாஷா உடல் அடக்கம் 

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியும், 'அல் - உம்மா' நிறுவனருமான பாஷாவின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தது.கோவையில்,1998, பிப்.,14ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பில், 58 பேர் பலியாகி, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கில் சிறை தண்டனை பெற்று, 'பரோலில்' இருந்த பாஷா, 84, நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு 'நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.பாஷாவின் உடல் உக்கடம், ரோஸ் அவென்யூவில் உள்ள அவரது வீட்டில் இருந்து பூமார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளி வாசலில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி நகரில், 2000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 18, 2024 10:06

நடக்கும் சில விஷயங்களை நினைத்தால் நமது நாட்டைப்பற்றி பெருமை கொள்ள முடிவதில்லை. தலைக்குனிவுதான் ஏற்படுகிறது. நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்ற குற்றவாளிக்கு கட்டித்தழுவி வரவேற்பு, குற்றம் செய்தவர் ஜாமீனில் வெளிவந்ததும் அமைச்சர் பதவி, கள்ளச் சாராயத்துக்கு ஊக்குவிப்புத்தொகை பத்து இலட்சம், இன்னமும் பல கிராமங்களில் பட்டியலின மக்களின் இறுதி ஊர்வலத்தில் பிணம் எடுத்துச் செல்லும் பாதை குறித்து கலவரங்களும் வன்முறைகளும் நடந்துகொண்டிருக்கும் போது, தேச விரோதத் தீவிரவாதக் கும்பல் தலைவனுக்கு, அதுவும் நூறு பேரைக் கொன்றவனுக்கு அரசு காவல்துறை பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம், அவனுக்கு அரசியல் தலைவர்கள் இறுதி மலர் அஞ்சலி, புகழாரம். மனித நாகரீகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? இதே அரசு கோவை செல்வபுரம் உக்கடம் பகுதியில் இறந்த இந்த கொலைகாரனுக்கு நினைவு மண்டபம் எழுப்பி ஆண்டு தோறும் அரசு முறை நினைவாஞ்சலி செலுத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது போல இருக்கிறது கேவலம் பதவி வெறி கொண்டு வோட்டுக்காக இப்படியெல்லாம் செய்யும் ஆட்சியாளர்கள் திருந்தவே வழியில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை