உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பை

 வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பை

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையோரப்பகுதிகளிலும், வனத்துக்குள்ளாகச் செல்லும் பாதைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. மான், காட்டுமாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோடை காலம் என்பதால் வனத்தின் மையப்பகுதியில் இருந்து எல்லையோர பகுதிகளுக்கு வரும் காலம் இது. ஆனைகட்டி பகுதியில் வழிநெடுக பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. இவை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு, வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன. வனத்துறையினர், அனைத்து வித வாகனங்களையும் கவனமாக பரிசோதித்து, பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வோருக்கு அபராதம் விதித்து, கட்டுப்படுத்த வேண்டும் என்பதே, வன உயிரின ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ