உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடர்ந்து ரத்து; மக்கள் அவதி

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடர்ந்து ரத்து; மக்கள் அவதி

கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடக்கும் இக்கூட்டத்தில் பொது மக்கள் அடிப்படை வசதிகள் சார்ந்த புகார்கள், கோரிக்கை மனுக்கள் அளித்துவருகின்றனர். இன்று நடக்கவிருந்த குறைதீர் கூட்டம், போத்தனுார் சங்கமம் திருமண மண்டபத்தில், 85, 95வது வார்டுகளுக்கு நடக்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் காரணமாக, ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி