உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி வழிபாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி வழிபாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. * பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர். * டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன், பெருமாள் அருள்பாலித்தார். * ஆனைமலை அருகே, ரமணமுதலிபுதுார் வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. * நெகமம் அருகே காட்டம்பட்டிபுதூரில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலையில் சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, புதிய தேரில் உற்சவர் எழுந்தருளி கோவில் பிரகாரம் சுற்றி பவனி வரும் நிகழ்வு நடந்தது. மதியம் படையல் வழிபாடு, தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் ஜடாரி ஆசிர்வாதம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வால்பாறை வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையான நேற்று முன் தினம் சிறப்பு பூஜை நடந்தது. காலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமமும், 5:00 மணிக்கு பால், மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு, பெருமாளுக்கு அபிேஷக பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகர், ஆஞ்சநேயர், மாரியம்மன் ஆகியோருக்கும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. பின் பெருமாள் தேவியருடன் தேரில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை