ராமநவமி கொண்டாட்டம்
கோவை: ராம்நகர் கோதண்டராமர் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று சுவாமி பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமநவமி பிரம்மோற்சவம் 18 ல் துவங்கியது. கருட பிரதிஷ்டை நடந்தது. ஒவ்வொரு நாளும் சிம்மம், ஹம்ஸம், சேஷ, ஹனுமந்த, கருட, கஜ, குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார். மார்ச் 25 ல் சுவாமிக்கு திருமஞ்சனமும், மாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது. ராமநவமியான நேற்று காலை 7 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம், புஷ்பகவிமானம் புறப்பாடு நடந்தது. சுவாமி பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.