உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடாத மழையிலும் விடாது ஆட்டம்; இந்துஸ்தான் பெண்கள் அணி அபாரம்

அடாத மழையிலும் விடாது ஆட்டம்; இந்துஸ்தான் பெண்கள் அணி அபாரம்

கோவை : அண்ணா பல்கலை பெண்களுக்கான வாலிபால் போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி 'சாம்பியன்ஷிப்' பெற்றது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, பெண்களுக்கான(10வது மண்டலம்) வாலிபால் போட்டி, நரசிபுரம் சி.ஐ.இ.டி., கல்லுாரியில் நடந்தது. 10 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் மகாலிங்கம் இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் அரையிறுதியில், பி.ஏ., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது.இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் பி.ஏ., கல்லுாரி அணியை வீழ்த்தி, 'சாம்பியன்ஷிப்' பெற்றது. அடாத மழையிலும் வீரர்கள் விடாது விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணய்யன், முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ