உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புரட்டாசி மாசம் பிறந்தாச்சு; மீன் விலை குறைஞ்சாச்சு

புரட்டாசி மாசம் பிறந்தாச்சு; மீன் விலை குறைஞ்சாச்சு

கோவை; புரட்டாசி மாதம் என்பதால், கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் விலை குறைந்துள்ளது. கோவை மீன் மார்க்கெட்டுக்கு, கேரளா, ராமேஸ்வரம், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.தினமும், 50 முதல் 60 டன் வரை வரத்து உள்ளது. புரட்டாசி, பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், இந்த மாதத்தில் இந்துக்களில் பலர் விரதம் இருந்து, பெருமாளை வழிபடும் வழக்கம் உள்ளது. மீன் உள்ளிட்ட அசைவ உணவை தவிர்த்து விடுகின்றனர். இதனால், கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில், மீன் விலை குறைந்துள்ளது. நேற்று உக்கடம் மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம், 450 ரூபாய்க்கும், வெள்ளை ஊளி, 160 ரூபாய்க்கும், மஞ்சப்பாறை 380 ரூபாய்க்கும், கண்ணாடி பாறை 500 ரூபாய்க்கும், கருப்பு வாவல் 450 ரூபாய்க்கும், சாளை மத்தி 200 ரூபாய்க்கும், கிளாத்தி, 300 ரூபாய்க்கும், கறிமீன் 320 ரூபாய்க்கும், கிளி மீன் 450 ரூபாய்க்கும், அயிலை 160 ரூபாய்க்கும், பொன்னாம்பாறை 200 ரூபாய்க்கும், கிழங்கான் 180 ரூபாய்க்கும், நெத்திலி 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. உக்கடம் லாரி பேட்டை மீன் மார்க்கெட் மொத்த விற்பனையாளர் சங்க செயலாளர் காதர் கூறுகையில், ''புரட்டாசி மாதத்தில் மீன் விலை குறைவது வழக்கம். மீன் வரத்தும் அதிகமாக இருக்கும். 1000 ரூபாய்க்கு விற்ற வஞ்சிரம். இப்போது 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இன்னும் ஐந்து மாதங்களுக்கு மீன் விலை இப்படி மந்தமாகதான் இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி