தினமலர் - பட்டம் மெகா வினாடி - வினா போட்டி சிறப்பான பதிலால் சிகரத்தை நோக்கி மாணவர்கள்
கோவை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியில், மாணவர்கள் சிறப்பாக பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 2018ம் ஆண்டு முதல் 'வினாடி - வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 'வினாடி - வினா' விருது, 2024-25' போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், கடந்த மாதம் 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சீஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடத்தப்படும்.இதிலிருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டி நடத்தப்படும். இறுதிப் போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நேற்று, கவுண்டம்பாளை யம் அங்கப்பா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 50 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத் திறன் தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'இ' அணியை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவன் துாயவன், ஏழாம் வகுப்பு மாணவன் சாய் தனுஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் சித்ரா பரிசு வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் புனிதா, பிரதிபா, திவ்யா ஆகியோர் உடனிருந்தனர்.