உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி டக் டக் என பதிலளித்து மாணவ, மாணவியர் அசத்தல்

தினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி டக் டக் என பதிலளித்து மாணவ, மாணவியர் அசத்தல்

(படங்கள்: விக்னேஷ், பிரவீனா)கோவை- 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதில் அளித்தனர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 'வினாடி-வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த, 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டுவருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நேற்று துடியலுார், வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 46 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஜி' அணியை சேர்ந்த, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் தர்சன், அனிருத் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் மணிமாறன், துணை முதல்வர் ராஜ்ஸ்ரீ ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். போட்டி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வி, தமிழ் ஆசிரியர்கள் ஆரோக்ய மேரி, அமுதா, நுாலகர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.அதேபோல், சிங்காநல்லுார் அடுத்த நீலிக்கோனாம்பாளையம், என்.எம்., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த போட்டியில், 115 மாணவ, மாணவியர் தகுதிச் சுற்றுக்கான தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி இடம்பெற்றது.நிறைவில், 'இ' அணியை சேர்ந்த பிளஸ்1 வகுப்பு மாணவி சங்கமித்ரா, பத்தாம் வகுப்பு மாணவி கமலிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பள்ளி முதல்வர் ஜெயராமன் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் கிறிஸ்டி குட்டி, நிசாந்தி, கருப்பசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை