உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை பொருட்கள் வீட்டில் இருந்து பறிமுதல்

புகையிலை பொருட்கள் வீட்டில் இருந்து பறிமுதல்

கோவை; கோவை பீளமேடு போலீசாருக்கு, கருப்பராயன்பாளையம் ஹரினா கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. போலீசார் சோதனை நடத்தியதில், மூட்டைகளில் புகையிலைப் பொருட்கள் இருந்தன. வீட்டின் உரிமையாளர் விஜயகுமார், 45 அவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 90 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ