போக்குவரத்து நெரிசல்
உடுமலை : மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் புறநகர் பஸ்கள் செல்லாததால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டுக்குள் டவுன்பஸ்கள் தவிர, புறநகர் பஸ்கள் செல்வதில்லை.புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வெளியே நின்று பயணியரை ஏற்றி, இறக்கி செல்வதால், அடிக்கடி போக்குவரது நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று திரும்ப போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.