உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிள்ளையில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

கிள்ளையில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

கிள்ளை : கிள்ளையில், கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரம் நடந்தது.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் தோப்புசுந்தர், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ரெங்கசாமி முன்னிலை வகித்தனர். கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் வரவேற்றார்.பாண்டியன் எம்.எல்.ஏ., பிரசாரத்தை துவக்கி வைத்து, துண்டு பிரசுரம் வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர்கள் தேன்மொழி, செல்வம், மாவட்ட இலக்கிய அணி தில்லை கோபி, மாவட்ட பாசரை சண்முகம், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், மீனவரணி வீராசாமி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி தமிழ்மணி, முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார், முன்னாள் துணைசேர்மன் முடிவண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை