உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் பேர்பெரியான்குப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆனந்த், பி.டி.ஒ.,க்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். முகாமினை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முகாமில் 750 மனுக்கள் பெறப்பட்டது.ஊனமுற்றோர்களுக்கு 5 வீல் சக்கர நாற்காலி, கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ கிட் உள்ளிட்டவை வழங்கினர். டாக்டர் அறிவொளி, சுப்ரமணியன், வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி, பள்ளி தலைமை ஆசிரியை கிரிஜா, மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன், ஊராட்சி தலைவர்கள் சக்கரவர்த்தி, தேசிங்கு, காந்திபாலகிருஷ்ணன், அம்பிகாகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை