மேலும் செய்திகள்
அன்னதானம் வழங்கல்
10-Aug-2024
கடலுார்: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, தமிழ்நாடு ஐயப்பா சேவா சங்கம் சார்பில், கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்கத் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் பாலமுருகன், அன்னதான குழு மாவட்ட தலைவர் பாபு, மேலாளர் சுந்தர கண்ணன் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் சிவமணி, அழகப்பா ஜுவல்லரி மணி ஆகியோர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில், மாவட்ட இணை செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், ஆனந்தன், சுரேஷ்குமார், ராஜா, பன்னீர்செல்வம், ஹரிகுமார், மாரிபத்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
10-Aug-2024