மேலும் செய்திகள்
சரநாராயண பெருமாளுக்கு கண்ணன் அலங்காரம்
28-Aug-2024
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதையொட்டி, காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
28-Aug-2024