மேலும் செய்திகள்
கைவினை பொருள் கண்காட்சி துவக்கம்
07-Aug-2024
கடலுார்: கடலுாரில் கலாஷேத்ரா கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனையில் ஏராளமான அழகு சாதன பொருட்கள், துணி ரகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.கலாஷேத்ரா கைத்தறி கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, கடலுார் நெல்லிக்குப்பம் ரோடு சுப லட்சுமி மகாலில் கடந்த 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கண்காட்சி விற்பனையில் பெங்கால் காட்டன் சேலைகள், மதுரை சுங்கடி புடவைகள், இக்கட் அஜ்ரக், காதி லக்னோ சிக்கன் ஒர்க் டாப்ஸ் வகைகள், ஜெய்ப்பூர் குஜராத் காட்டன் சேலைகள், நைட்டிகள், குர்தீஸ், வகைகள், ஒரிசா சம்பல்பூர், சேலைகள், ஜெய்ப்பூர், அரியானா மெத்தை விரிப்புகள் குவிக்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கான காக்ரசோலி, ஸ்கர்ட் மற்றும் ஐம்பொன் நகைகள், ஸ்பாடிக மாலைகள், கருங்காலி மாலைகள், பித்தளை விளக்கு, சிலைகள், மர பொம்மைகள், மைசூர் பத்திகள், ஜெய்ப்பூர் துணி வகைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் விழாக்கால சலுகையாக 10 முதல் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. காலை 9:30 மணி முதல் இரவு 9:30 வரை விற்பனை நடக்கிறது. கண்காட்சி வரும் செப்., 2ம் தேதி வரை நடக்கிறது.
07-Aug-2024