நகராட்சி துவக்கப்பள்ளி ஆண்டு விழா
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி துவக்கப்பள்ளியில் 113ம் ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் மேனகா தலைமை தாங்கினார். கவுன்சிலர் பாரூக்உசேன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சரண்யா, ஆபியா வரவேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேர்மன் ஜெயந்தி, ஆணையர் கிருஷ்ணராஜன் பரிசுகள் வழங்கினர்.