உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்

விருத்தாசலம் : விருத்தாசலம் வழியாக கூழாங்கற்கள் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை சுரங்கத்துறை உதவி இயக்குனர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.விருத்தாசலம் அடுத்த ஆலடி, பாலக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது, ஆலடி முகப்பு சாலை வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, டிரைவர் தப்பியோடினார். தொடர்ந்து, 5 யூனிட் கூழாங்கற்களுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை