உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலக சிறுநீரக தின விழிப்புணர்வு ஊர்வலம்

உலக சிறுநீரக தின விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்: உலக சிறுநீரகத் தினத்தை முன்னிட்டு கடலுார் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கடலுார் டவுன்ஹால் அருகில் நடந்த ஊர்வலத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, கலெக்டர் பேசுகையில், சிறுநீரக நோயால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் 850 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் 3.1 மில்லியன் மக்கள் இறப்பதாக கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் 2040ம் ஆண்டில் இறப்பு விகிதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுநீரக பாதிப்பை கண்டறிய யூரியா, கிரியாட்டின் மற்றும் சிறுநீரில் ஆல்புமின் பரிசோதனை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது என்றார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர், சிறுநீரகவியல் சிறப்பு டாக்டர் திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை