உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரே பைக்கில் 5 பேர் பயணம்; பஸ் மோதி மாணவர் மரணம்

ஒரே பைக்கில் 5 பேர் பயணம்; பஸ் மோதி மாணவர் மரணம்

குறிஞ்சிப்பாடி : கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கேசவநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் சுனில்ராஜ், 17. குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.நேற்று காலை, அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ், 31, என்பவருடன் குறிஞ்சிப்பாடிக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றார். பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்த அதே ஊரைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி சாந்தினி, 16, பத்தாம் வகுப்பு மாணவியர் சந்தியா, 15, பவித்ரா, 15, ஆகியோரும் அதே பைக்கில் குறிஞ்சிப்பாடி சென்றனர்.கஞ்சமநாதன்பேட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த சுனில்ராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார். மோகன்ராஜ், சாந்தினி, சந்தியா, பவித்ரா படுகாயமடைந்தனர். குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
பிப் 11, 2025 09:14

இந்தியாவில் எல்லாமே சீப். விலை கொள்ளை மலிவு . 15 பேர் வரை பைக்கில் போகலாம். ஒண்ணும் சொல்லமாட்டாய்ங்க.


சமீபத்திய செய்தி