மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்
02-Sep-2025
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். கூட்டத்தில், 612 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்கள் (ச.பா.தி) தங்கமணி, (முத்திரைத்தாள்) தனலட்சுமி, ஆய்வுக்குழு அலுவலர் ராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
02-Sep-2025